கண்ணில் உறவாடி
என்னுள் கருவான
காதல் உறவே…
மண்ணில் மழையின்றி
வாடும் பயிராக
முடிவின் வழிசென்ற எனக்கு
கண்ணின் அசைவாலே
காதல் மொழி பேசி
வாழ்வின் பொருள் சொன்ன
உயிரே…
உயிரின் உயிராகி
உறவின் உறவாகி
எனக்குள் உறைந்து விட்டாய்
நீ……
-K.PAVAN-
கண்ணில் உறவாடி
என்னுள் கருவான
காதல் உறவே…
மண்ணில் மழையின்றி
வாடும் பயிராக
முடிவின் வழிசென்ற எனக்கு
கண்ணின் அசைவாலே
காதல் மொழி பேசி
வாழ்வின் பொருள் சொன்ன
உயிரே…
உயிரின் உயிராகி
உறவின் உறவாகி
எனக்குள் உறைந்து விட்டாய்
நீ……
-K.PAVAN-
எரிகின்ற விழியில்
சொரிகின்ற கண்ணீர்
துளியெங்கும் உன்முகம்
சரிகின்ற சூரியன்
சாயங்கால நேரம்
சந்தித்த பொழுதுகளை
சிந்திக்க வைக்கிறது..
சிந்தையில் நிறைந்திருக்கும்
சிரிக்கும் மலரே…
தூரத்தே விலகி நின்று-என்
சோகத்தை ரசிக்காதே..
-K.Pavan-
மௌனத்தால் கொல்லாதே
மனதை வாட்டாதே
எண்ணத்தில் தினமும்
இனிமைகளைத்தந்தவளே
இன்று….
என்மனதை எரித்து-அதில்
குளிர்காய நினைக்காதே
என்மனதுக்குள் இருக்கும்
உன்னையும் அது சுட்டுவிடும்
இது என்கட்டளை அல்ல
கோரிக்கை…. Please
-K.Pavan-