எனக்குள் உறைந்து விட்டாய்…

மே 4, 2008

கண்ணில் உறவாடி
என்னுள் கருவான
காதல் உறவே…

மண்ணில் மழையின்றி
வாடும் பயிராக
முடிவின் வழிசென்ற எனக்கு

கண்ணின் அசைவாலே
காதல் மொழி பேசி
வாழ்வின் பொருள் சொன்ன
உயிரே…

உயிரின் உயிராகி
உறவின் உறவாகி
எனக்குள் உறைந்து விட்டாய்
நீ……

-K.PAVAN-


சோகத்தை ரசிக்காதே..

ஏப்ரல் 30, 2008

எரிகின்ற விழியில்
சொரிகின்ற கண்ணீர்
துளியெங்கும் உன்முகம்

சரிகின்ற சூரியன்
சாயங்கால நேரம்
சந்தித்த பொழுதுகளை
சிந்திக்க வைக்கிறது..

சிந்தையில் நிறைந்திருக்கும்
சிரிக்கும் மலரே…
தூரத்தே விலகி நின்று-என்
சோகத்தை ரசிக்காதே..

  -K.Pavan-

 


மௌனத்தால் கொல்லாதே

ஏப்ரல் 30, 2008

மௌனத்தால் கொல்லாதே
மனதை வாட்டாதே
எண்ணத்தில் தினமும்
இனிமைகளைத்தந்தவளே
இன்று….
         என்மனதை எரித்து-அதில்
         குளிர்காய நினைக்காதே
         என்மனதுக்குள் இருக்கும்
         உன்னையும் அது சுட்டுவிடும்
         இது என்கட்டளை அல்ல
        கோரிக்கை….
Please

       -K.Pavan-


நம் சந்திப்பும் நிகழும்…

ஏப்ரல் 26, 2008

என் இனிய நண்பர்களுக்கு
மீண்டும் எப்போது எம்
இனிமையான சந்திப்பு
எனும் ஏக்கத்தோடு

என்றாவது எம் விலாசம்
தொலைந்து போகும் போது
எங்கிருந்தாவது நான் அழுவேன்
என் கண்ணீரால் கரையும்
உங்கள் இதயங்கள்

நீங்கள் இல்லாத என்
மனம் மீண்டும் பசுமைகளை
தேடிப்போகும் இனிமையான
அந்த நாட்களை எண்ணி

வாழ்க்கையில் பெரிய
ஆச்சர்யம் அன்பு
நிறைந்தவர்களை எப்போதாவது
எங்காவது சந்திக்க நேரிடும்

அதுபோல்

நம் சந்திப்பும் நிகழும்
என வேண்டிக் கொள்ளுங்கள்
நம்பிக்கையோடு நாட்களை
நகர்த்துங்கள்
காற்றாவது சுமந்து
வரும் என் முகவரியை.

RAJ KUMAR